+2 மார்க்
நான் +2 முடித்த வேளை அது. பெரிசாக மார்க் வாங்கவில்லை என்றாலும் பாசஸானதே பெரிய விஷயமாக பட்டது. மார்க் ஷீட் வாங்கியதுமே தெரிந்துவிட்டது இன்று வீட்டில் தீபாவளி.
வீட்டிற்குள் நுழைந்ததுமே சோகத்தில் இருப்பவனாய் காண்பிச்சுக்க எதோ feelings ஓட இருக்கிற மாதிரி பொத்தென பெட்ல விழுந்துவிட்டேன். சாப்பிட கூப்பிட்ட அண்ணனிடம் சாப்பாடு வேண்டாம் என்று அடம் வேறு. உண்மையை சொல்லனும்னா அன்னைக்கு சரியான பசி. கூப்பிட்ட நேரத்தில் சாப்பிட போனால் நம்ம acting என்ன ஆகிறது. (character ஆ மாறிடோம்ல). அப்புறம் என்ன பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு கொஞ்ம் போல அண்டா சோறு சாப்பிட்டத மறக்க முடியாது.
கல்லூரியில் சேர வேண்டிய நேரமும் வந்தது, என் அப்பா தான் படித்த கல்லூரியில் என்னை சேர்க்க தன்னால் ஆன முயற்சியில் ஈடுப்பட்டார். எப்படி னு கேக்கிறீங்களா முன்னாள் கல்லூரி முதல்வர் மூலம் சிபாரிசு பெற்றுக்கொண்டார். என் அண்ணன் தன் பங்கிற்கு application form வாங்கிட்டு வந்தான். நான என்ன செய்து கொண்டிருந்தேனு நீங்க கேக்கிறது எனக்கு கேக்குது, நான் தான் இன்னும் character அ விட்டு வெளியே வரலையே :)
வீட்ல ஒரு வட்ட மேசை மாநாட்டுல எனக்கு பல advice எத பத்தினு கேக்கிறீங்களா, நான் எந்த பாடப்பிரிவு எடுத்து படிக்கனும்னு அவரவர்க்கு தெரிந்ததை சொன்னாங்க. நான் கொஞ்சம் யோசித்து physics என்றேன். நான் அதிகமா மார்க் எடுத்தது அதில தான் பின்ன அதில தாங்க படம் போட்டு aim apparatus procedure எழுதினா பாதி மார்க் போடுவாங்க. வேற எதாவது எடுத்து படிச்சா semester க்கு semester நமக்கு தீபாவளி. நமக்கும் feeling ஆகிற மாதிரி ஓரே character பன்னா போர் அடிச்சிறாது. அதான் future அ மனசில வச்சிட்டு சும்மா physics னு சொல்லிட்டேன்.
கடைசியில நான் physics படிக்கறதுன்னு முடிவாயிடுச்சு. எங்க அப்பா இன்னும் ஒரு படி மேல போய் recommendation வாங்க physics HOD அ பார்க்க கூட்டிட்டு போனாரு. அங்க போனா என் மார்க் ஷிட்ட பார்த்துட்டு ஒரு லுக் விட்டார் பாருங்க. அந்த பார்வையில இவனெல்லாம் படிச்சி என்ன கிழிக்க போறான்னு ங்கிற மாதிரி ஒரு அர்த்தம் என் சிறு மூளையில பட்டுச்சு. ரொம்ப கம்மியா மார்க் எடுத்திருக்கானேன்னு அவர் சொல்ல எங்க அப்பாவுக்கு temperature ஏறியத நான் பார்க்காத மாதிரி இருந்தத யாரும் பார்க்கல. சரி ஒரு வழியா HOD டிரை பன்றேன்னு சொல்லிட்டார். எங்க அப்பா வீட்டுக்கு வந்ததும் தீபாவளி மாதிரி இல்லைனாலும் கார்த்திக தீபம் அளவுக்கு அர்ச்சனை கிடைச்சது.
ஒரு வழியா interview க்கு லெட்டர் வந்ததுமே எனக்கு நிம்மதியே வந்தது. அப்பாவுடன் interview போகும் போதே எதோ நடக்க போகுதுன்னு தோனிச்சு. அங்க போனா interview la newtons lawலாம் கேக்கிறானுங்கன்னு மத்த பசங்க சொன்னாங்க. எனக்கு ABCD யே மறந்துப் போச்சே. இதுல newton veraya. எனக்கு தெரிஞ்சது 3rd law மட்டும் தான்.அது என்னமோ எனக்கு நடக்க போற interview ல (action) வீட்ல தீபாவளி(reaction) யா தெரிய போறது உறுதி ஆயிடுச்சு. சரி நாம தான் பிரச்சனையை போர்வையா தூங்கிற ஜாதியாச்செ. interview ல என்ன நினைச்சாங்களோ நம்மக்கிட்ட ஒன்னும் கேக்கல. நான் எடுத்த மார்க்கிற்கு இதுவே too much னு நினைச்சிருப்பாய்ங்களோ. இன்னைக்கு தீபாவளி இல்லங்கிறது மட்டும் உறுதியாயிடுச்சு. ஒரு வழியா நாமேலும் college ல சேர்ந்துடோம்ல. இன்டர்வியூ முடிஞ்சு வெளியே வரும் போது HOD அ பார்த்து தேங்க்ஸ் சொல்லிட்டு வர போனா, அங்க அவரு எங்க அப்பாக்கிட்ட உங்க முகத்துக்காக சீட் கொடுத்தேனு ஊசி வெடிய பத்த வைச்சிட்டார்.
அப்பாடா காலேஜ் ல சேர்ந்தாச்சு, இனி பிரச்சனை ஒன்னும் கிடையாதுன்னு சந்தோசமா காலேஜ் போனேன். அங்க முத மூனுநாளு BRIDGE COURSE நடத்துவானுங்க. அது என்னன்னா ஆங்கில பள்ளி மாணவர்களையும், தமிழ் பள்ளி மாணவர்களையும் சேர்த்து வச்சு பாலம் கட்டுவாங்கலாம். மூனு நாளும் ENGLISH தான். ஒன்னும் செய்ய முடியாது. English புரபோசர் வந்தார், வந்து bridge course னா என்னன்னு சொல்லிட்டு எங்கல அறிமுக படுத்திக்க சொன்னார். அறிமுக படுத்தும் போது மார்க் கையும் சொல்லனுமாம். என்னோட முதல் Co Ed க்ளாஸ்ல அசிங்கப்பட கூடதுன்னு நினைச்சு பந்தாவா 960 மார்க்னு சொல்லிட்டு மானத்த காப்பாத்தின சந்தோஷத்தில உக்கார்ந்துட்டேன்.
பொண்ணுங்க ஒவ்வொன்னா எந்துச்சு மார்க் சொல்ல ஆரம்பிச்சுதுங்க. ஒரு பொண்ணு 650 னு சொன்னதுமே யாரோ மண்டையில சொட்டுனு கொட்டின மாதிரி ஒரு feeling. அந்த HOD எனக்கு ஊசி வெடிய போட்டுட்டு என்ன விட கம்மியா மார்க எடுத்த பொண்ணுங்களுக்கு சீட் கொடுத்திருக்கிறார்.
அன்னைக்கு நான் கொளுத்தினேனுங்க வெடி வீட்ல....
பின்னால அந்த HOD அப்படிதானுன்னு தெரிஞ்சிடுச்சு. சரி அதுக்கு என்ன செய்ய முடியும். ஆனா இன்னைக்கு நினைச்சாலும் நான் எடுத்த மார்க்க நினைச்சா நானெல்லாம் படிச்சு பொழைக்க வந்தது அவரால தானோன்னு நினைக்க தோனுது
(பி.கு. நான் எடுத்த மார்க சொல்ல மறந்துட்டேன்ல, 960 மார்க் குங்க :) முன்னாலயே சொன்னோம்ல நாங்கெல்லாம் character ஆ மாறிட்டோம்னா....)
No comments:
Post a Comment