1 1/2 வருட உழைப்பு...
ஏவிஎம், ரஜினி, ஷங்கர், ஏஆர் ரகுமான் மிக பெரிய கூட்டனி
இப்படி பல எதிர்பார்ப்பின் இடையே நானும் ஒருத்தனாய் போய் திரையரங்கினுள் அமர்ந்தேன்.
சரி. முதல்ல கதைய பார்த்துருவோம் அப்புறம் மத்தத பேசலாம்...
US ல சம்பாதிச்சு நம்ம ஊர்ல உள்ள ஏழை மக்களுக்கு இலவச கல்வி, மருத்துவ வசதி கொடுக்கும் நோக்கத்தோடு தாயகம் வருகிறார் சிவாஜி (ரஜினிகாந்த்). இங்க பல கல்வி நிறுவனங்கள் மூலம் கோடி கோடியாக சம்பாதித்து வரும் ஆதிசேஷன் என்கிற ஆதி (சுமன்) இந்த திட்டத்த நடத்த விடாம சதி செய்ய ஆரம்பிகிறார். இங்க ஆரம்பமாகிறது மோதல்.
சிவாஜி பல்கலைக்கழக விஷயமாக அரசாங்க அதிகாரிகளை போய் பார்க்க அங்கு லஞ்சம் எட்டி பார்க்கிறது. சரி. எடுத்த காரியத்தை முடிக்காமல் விட கூடாதுன்னு நினைச்சு லஞ்சம் கொடுத்து காரியம் சாதிச்சு சிவாஜி பல்கலைக்கழகம் கட்ட ஆரம்பிக்கிறார். இத பார்த்து கோபம் கொண்ட ஆதி அரசாங்கத்தை மாற்றி சிவாஜிக்கு மீண்டும் தொல்லை தருகிறார். சிவாஜி வேறு வழியில்லாமல் கோர்ட் படியேற, அங்கு லஞ்சம் கொடுத்து காரியம் சாதித்த குற்றத்திற்காக சிவாஜி பல்கழைக்கழகத்தை அரசாங்கம் தடை செய்கிறது. கையில் இருந்த பனம் அத்தனையும் கரைந்து நிற்கும் சிவாஜியிடம் ஆதி ஒரு ரூபாய் பிச்சை கொடுத்து பிழைத்து கொள் என்று கூறி செல்கிறார். கையில் ஓரு ரூபாய் என்ன செய்யப்போகிறார் சிவாஜி???? இடைவேளை.
அப்புறமென்ன ஒத்த ருபாய வச்சு எப்படி தான் நினைச்சத செய்தார்ங்கிறது மீதிக்கதை....
என்ன ஒத்த ரூபா கதைக்கு ஆயிரம் ரூபா ரேஞ்சுக்கு பில்டப்பா னு நீங்க கேக்கலாம் ஆனா இதுக்கு ஒரே பதில் ரஜினி இருக்கிறார்ல அப்புறம் என்ன. கறுப்பு பணத்தால எவ்வளவு சீரழிவு ன்னு சொல்லியும் இருக்காங்க...
படத்துல எங்க பார்த்தாலும் ரஜினி இருக்கார்.
தமிழ்ச்செல்வியாக ஸ்ரேயா,மறக்கலாம என்ன. ரஜினி முதல் பாதியில் தமிழ்ச்செல்விய சுத்தி சுத்தி வந்து ரொமான்ஸ் செய்றேன்னு கடுப்பேத்துகிறார். எப்படி பட்ட பிரச்சினை வந்தாலும் அடுத்த சீன்ல ரஜினி ஸ்ரேயாக்கிட்ட ரொமான்ஸ் பன்ன போய்டுவார். அப்புறம் என்ன வெளிநாட்டுக்கு போய் டான்ஸ் ஆடிட்டு வந்துறுவார். ஆனா என்ன சொன்னாலும் அந்த ஸ்ரேயா பொண்ணுஅழகு தாங்க. உடம்ப வில்லா வழைச்சு டான்ஸ் ஆடுது அந்த பொண்ணு.
தாய்மாமன், தமிழ் சினிமாவுல காமெடி பன்றதுக்குன்னு ஒரு உறவு(கிழக்கு சீமையில விதிவிலக்கு). எப்ப இத நிறுத்த போறாங்கன்னு தெரியல. என்ன பார்க்கிறீங்க இந்த படத்தில வேற யாருமில்ல நம்ம விவேக் தான் ரஜினிக்கு மாமா. நான் காமெடி கீமெடி பன்னல சத்தியமா விவேக் தான் ரஜினியோட மாமா.. இதுல வேற ரஜினி விவேக்க மாமான்னு கூப்பிடும் போது அட என்னங்கப்பா இது எல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியலை ன்னு கேக்க தோனுது....
வில்லன் சுமன், இந்த காரெக்டருக்கு சத்யராஜ கேட்டதாக செய்தி. சத்யராஜ் தப்பிச்சார். கஞ்சி போட்ட வேட்டி சட்ட போட்டுக்கிட்டு சுமன் எதாவது பன்னுவாரான்னு பார்த்தா தண்ணீயில போட்ட சட்ட மாதிரி ஒன்னும் செய்யாம பொசுக்கின்னு இருக்கார். இந்த வில்லனுக்கா ரஜினி இவ்வளவு தூரம் கஷ்டப்படனும்...மூனு மணி நேரம் படம் எடுக்கனும்ல... . RULING PARTY அ மாத்திற அளவுக்கு பவர்புல் வில்லன் ரஜினியிடம் சர்க்கஸ் கோமாளியாய் நிற்கும் போது சிப்பு தான் வருது.
அப்புறம் மணிவன்னன், வடிவுக்கரசி, பட்டிமன்றம் புகழ் ராஜா, சாலமன் பாப்பையா சன்முகராஜ் இப்படி பலர்...ஆங் மறக்க பார்த்தேன்ல ரகுவரன்...டாக்டரா வர்றார்...முதல்வன் ல
பார்த்த ரகுவரன இதுல பத்தோடு பதினொன்னா காட்டினது கொஞ்சம் வருத்தம் தான்.பராவாயில்ல ரஜினி படத்தில இருக்கும் போது வேற யாருக்கும் வேலை இருக்காதுல.
ரஜினி, இளமையான ரஜினி, அழகான ரஜினியா வலம் வர்றார். இடைவேளைக்கு அப்புறம் வரும் மொட்டை ரஜினி அசத்தல். ஒரு பாட்டுல ரஜினி ச்சும்மா வெள்ளைக்கார துரையாட்டம் வர்றார் பாருங்க...வாழ்க கிராப்பிக்ஸ்...எதோ INNOVATIVE CGI வொர்க்காம். மொட்டை ரஜினியிடம் நீங்க சிவாஜியான்னு நிருபர்கள் கேக்க இல்ல நான் MGR சொல்லும் போது தியேட்டர்ல விசில் பறக்குதுங்க. கிளைமேக்ஸ் சண்டை பட்டய கெளப்புது. பீட்டர் ஹெயினின் உழைப்பு தெரிகிறது. ரஜினி இந்த சண்டைக்காக மெனக்கெட்டிருக்கிறார். ரஜினி யோட Chewing Gum Style - அத ரசிக்க முடியல ஏன்னா அதுலயும் கிராபிக்ஸ்.
ஷங்கர் 1 1/2 வருஷமா சிவாஜி இப்ப வந்துருவார்னு அப்ப வந்துருவார்னு சொல்லிட்டு கடைசியில கொண்டு வந்துட்டார். பணத்தை கொட்டி கொடுக்க ஏவிஎம், யூத்புல் பாட்டு கொடுக்க ஏஆர் ரகுமான், மெகா பலம் ரஜினி இப்படி ஒரு டீம் அ வச்சிக்கிட்டு ச்சும்மா பட்டைய கெளப்பியிருக்க வேண்டாமா. திரைக்கதை Strong அ இல்ல..உதாரணமா சிவாஜி பாதி தன்ணோட கறுப்பு பணத்த அடிச்சப்பறம் ஆதி ஒன்னுமே செய்யாம இருக்கிறது, First Half அ எப்படி கொண்டு போறதுண்ணு தெரியாம காட்சி இடைச்சொருகல்கள இப்படி சொல்லிட்டே போலாம். ஷங்கருக்கு ஒரு சபாஷ் சொல்லனும்னா, ரஜினிய இப்படி இளமைய காட்டிணதுக்கு வேனா சொல்லிக்கலாம். மக்கள்கிட்ட விழிப்புணர்வு கொண்டு வர்ற கதைக்கரு நல்லாதான் இருக்கு ஆனா அதே சமயத்தில LAPTOP On பன்னினதும் ஒரு எலி வந்து VOICE RECOGNIZE பன்றது எல்லாம் ரொம்ப TOO MUCH. தேவையில்லாத சீன்ஸ் அ குறைத்திருக்கலாம் உதாரணமா LAPTOP பாஸ்வேர்ட பிரேக் பன்ன மிமிக்கிரி பன்றதெல்லாம் டைம் வேஸ்ட். பிரம்மாண்டமா பன்றேன்னு பாட்டுக்கும் பைட்டுக்கும் காச கொட்டி இருக்காங்க. ஷங்கர் ரொமான்ஸ்ஸ எப்ப கவித்துவமா சொல்லுவீங்க.
சுஜாதாவும் இருக்கிறார். தோட்டாதரணியின் செட் முக்கியமா கண்ணாடி செட் சூப்பர்.
ஏஆர் ரகுமான் இசையில் சஹானா சஹானா, ஒரு கூடை, பல்லேலக்கா, வாஜி வாஜி பாடல்கள் கேட்கும்படி பார்க்கும்படியும் உள்ளது. ஓளிப்பதிவு கேவி ஆனந்த் படம் பேசுகிறது அவரோட திறமைய.
அப்பாடா ஒரு வழியா படம் வந்திருச்சு, இன்னும் ஒரு மாசம் எந்த பத்திரிகைய தொறந்தாலும் சிவாஜிய பத்தி தான் நியூஸ். ஷங்கர் எதாவது டீவியில ரஜினி ரொம்ப சூப்பர்ன்னு பேட்டி கொடுப்பார். படத்தை வெற்றி படமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி ன்னு ஏவிஎம் சொல்லும். இதை யெல்லாம் விட எத்தனை கறுப்பு பணம் வெள்ளையாக்கபட்டிருக்கும் என்பது எவருக்கும் தெரியாத ரகசியம்.
ஷங்கர் இந்த படத்த எடுக்கறதுக்கா இவ்வளவு நாளு...ஷங்கருக்கு AS A DIRECTOR - ஆ BETTER LUCK NEXT TIME. BATCHA க்கு அப்புறம் னு ஒரு நல்ல படம்ன்னு சொல்றாங்க பார்த்தா அப்படி தெரியல...BATCHA BATCHA தான்...சிவாஜி அத BEAT பன்னுங்கிறது ஒரு HYPE கொடுக்குமே தவிர RECORD லாம் பன்னாது.
புதுசா ஒன்னும் இல்லைனாலும் பழைய ரஜினிய பார்க்கிற அனுபவமே சிவாஜியின் வெற்றிக்கு வழிவகுக்கும். ரஜினிய போய் பார்த்துட்டு வரலாம்ங்க. சிம்ப்ளி ரஜினி பிலிம் னு சொல்லலாம்..
ஆனா என்ன சொன்னாலும் சரிங்க ச்சும்மா பேரக் கேட்டதும் அதிருதுல்ல... அதாங்க சிவாஜி