Sunday, July 29, 2007

கணக்கில நாங்கெல்லாம் புலி(ளி)ல

என்னடா இவன் புதுசா சொல்லப் போறான்னு நினைக்கிறீங்களா? ஓன்னும் இல்லைங்க.

இது என்னோட விடலை பருவ காலம்ங்க. இது மத்தவங்க மாதிரி வித்தியாசமா இருக்காதுங்க. முதல்ல என்னோட விடலைப்பருவ ப்ளாஷ்பேக். நான் ஸ்கூல் ல பெரிய படிப்ஸ் கிடையாதுங்க. விளையாட்டுக்கும் நமக்கும் ரொம்ப தூரம். அது என்னவோ தெரியல தெருவுல கிரிக்கெட் டீம் காப்டனா இருந்தாலும் ஸ்கூல் லெவல் ல நான் ஒரு உப்புக்கு சப்பானி. வாத்தியாருக்கெல்லாம் என்னைய பார்த்தா ஒரு தனி சந்தோஷம், பின்ன திட்ட ஆள் கிடைச்சா சும்மாவா. வீட்டில என்ன கோபம் இருந்தாலும் நம்ம தான் அவங்களுக்கு வடிகால். சும்மா விரட்டு விரட்டு னு விரட்டுவாங்க. நாமெல்லாம் இதுக்கு பயப்படுற ஆளா? போங்கப்பா திருத்தறதுக்கு வேற நல்ல ஆளா பிடிங்கன்னு சொல்லிட்டு போய்க்கிட்டே இருப்பேன்.

ஆனா என்னையே நான் அடிக்கடி கேட்டுக்கிற கேள்விங்க, எனக்கு அப்பெல்லாம் தெரிஞ்சது ஸ்கூல்(சும்மா இஷ்டமில்லாம போனது), வீடு, டியூசன் சென்டர்... இவ்வளவு தான். ஆனாலும் நான் சரியா படிக்கலங்கிறது எனக்கு ஏதும் புரியாத விஷயம்.

இப்படி இருந்த நேரத்தில +2 ல மிட்டேர்ம் எக்ஸாம்கங்கிற பேர்ல அடிக்கடி எக்ஸாம் வச்சு தொல்லை பன்னுவானுங்க. நமக்கு பரிட்சைனாலே வயித்துல புளிய கரைக்க ஆரம்பிச்சுடும், ஏன்னா படிக்கனும்ல. என் மேல கணக்கு வாத்தியாருக்கு ஒரு இனம் புரியாத பாசம்.
ஏன்னா எங்க அண்ணன ரொம்ப பிடிக்கும், அவன் நல்லா படிச்சா பிறகு பிடிக்காதா? நமக்கு அதுவே பிரச்சனை. சும்மா எதுக்கெடுத்தாலும் உங்க அண்ணன் எப்படி படிச்சான்னு கேட்டே நமக்கு இம்சைய கூட்டுவானுங்க. அன்னைக்கு பார்த்து கணக்கு பரிட்சை, நம்ம தான் எல்லாம் மறந்திடுற கேஸ் ஆச்சே...பரிட்சைங்கிறதே மறந்து போய் ஸ்கூல்க்கு போனா பரிட்சைக்கு எல்லாரும் படிக்கிறானுங்க. அடப்பாவிகளா நமக்கு யாராவது சகலை கிடைப்பானானு பார்த்தா ஒருத்தரும் இல்லை. அன்னைக்கின்னு பார்த்து முத க்ளாஸே கணக்கு, விளங்கி போயிடும்டீனு நினைச்சிட்டு எக்ஸாம் எழுத உக்கார்ந்திட்டேன்.


கேள்வி தாள பார்த்ததுமே தெரிஞ்சு போயிடுச்சு வச்சுடாங்கடா ஆப்புனு. ரொம்ப நேரம் டைம் பார்த்துட்டே எழுதினேன், என்னடா இவன் படிக்கலைன்னு சொல்லிட்டு பரிட்சை எழுதுறானேனு தான யோசிக்கிறீங்க அதாங்க இல்ல நானும் எவ்வளவு நேரம் தான் எழுதுற மாதிரி நடிக்கிறது, பெல் எப்ப அடிப்பாங்கன்னு தான் டைம் பார்த்தேன். வெத்து தாள கொடுக்க வேண்டாம்னு நினைச்சு சும்மா கிறுக்கி கொடுத்திட்டேன்.


சுமாரா 5 நாள் கழிச்சு திருத்தின பேப்பர கொடுத்தாங்க, எனக்கு அன்னைக்கு கொடுக்கல. வாத்தியார் ரெண்டு பேருக்கு பேப்பர கொடுக்காம புதிர் போட்டுட்டு போய்ட்டார். என்ன புதிர்னா ரெண்டுல ஒருத்தர் முட்டை னு சொல்லிட்டார். என்னோட க்ளாஸ்மேட்டுக்கு அல்லு கழண்டு போய் அழாத குறைதான். கவலபடாத அடுத்த பரிட்சையில பார்த்துடலாம் சொல்லி சமாதானம் படுத்தினேன்.
அடுத்த நாள் வாத்தியார் பேப்பர் கொடுத்தார் பார்த்தா நாம் தான் அந்த முட்ட மார்க். என் க்ளாஸ்மேட் என்ன ஒரு லுக் விட்டுட்டு போய் உக்கார்ந்துட்டான். நம்ம மேல தான் வாத்தியாருக்கு ரொம்ப பிரியமாச்சே, க்ளாஸ் முன்ன நிக்க வச்சு என் அண்ணன் எப்படி படிச்சாங்கிறது சொல்லி என்ன அசிங்கப்படுத்த ஆரம்பிச்சிட்டார். ஏனோ அன்னைக்கு அது பெரிசா தெரியல....ஆனா இன்னைக்கு நினைச்சா நம்மல அசிங்கப்படுத்திட்டாங்களோ ன்னு தோனும்.

இதுல என்ன ஆச்சர்யம் அப்படின்னு கேட்கிறீங்க பின்ன நான் கடைசியும் முதலுமா வாங்கின முட்டை அதுங்க....அதுக்கு அப்புறம் படிக்க ஆரம்பிச்சிருப்பேன்னு நினைச்சிடாதீங்க எப்பாடு பட்டாவது >0 எடுத்துரோம்ல.......


1 comment:

Anonymous said...

This guy started studying only in his PG. That too after a friend who is also like a mother to him started giving him hopes in life....
hehehheee.....